×

செங்கல்பட்டு அருகே தீவிபத்தில் குடிசை வீடு சேதம்

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே தீவிபத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. செங்கல்பட்டு அடுத்த பெருந்தண்டலம் எல்லையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (51). இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (48) அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இருவரும் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் பிற்பகலில் அவர்களது குடிசை வீடு திடீரென தீப் பற்றி எரிந்தது.

உடனே அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டு தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செங்கல்பட்டு தீயணைப்புத்துறை வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயை போராடி அணைத்தனர். ஆனால் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் சங்கரின் மனைவி மகளிர் உதவி குழுவில் கடன் வாங்கி வைத்திருந்த ரூ.50 ஆயிரம், 5 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், தொலைக்காட்சி பெட்டி, மின் விசிறி, ஆதார் அட்டை, நியாயவிலைக் கடை அட்டை என அனைத்தும் தீயில் கருகியதாக சங்கர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

வீட்டை இழந்த அவரது குடும்பத்தினரை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுத்துள்ளது. மேலும் மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயனைப்புதுறை வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post செங்கல்பட்டு அருகே தீவிபத்தில் குடிசை வீடு சேதம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Shankar ,Perundandalam Hahanayamman ,Maheshwari ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே தீவிபத்தில் குடிசை வீடு சேதம்